அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு; கொஞ்சம் அடக்கி வைக்கலாம்- செல்லூர் ராஜூ தெறி பேச்சு!

தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு தான் ஹைலைட்டாக மாறியுள்ளது. குறிப்பாக சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறியதை அடுத்து பலரும் அதிரடியாக குட்பை சொல்லி வருகின்றனர். இவர்கள் அதிமுகவில் சேருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அதிமுக அனுமதிக்கக் கூடாது என பாஜகவினர் காரசாரமாக பேசி வருகின்றனர்.

அதிமுக – பாஜக மோதல்

இதையொட்டி இருதரப்பிலும் வார்த்தை போர் தொடங்கியுள்ளது. ஒருபடி மேலே சென்று கோவில்பட்டியில்

உருவப்படத்தை பாஜகவினர் எரிக்க, அரியலூரில் அண்ணாமலை உருவப்படத்தை அதிமுகவினர் எரித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவிற்கு சகிப்புத்தன்மை இல்லை என்பது தெரிகிறது.

பாஜகவிற்கு சகிப்புத்தன்மை இல்லை

அந்த கட்சி தமிழ்நாட்டில் ஏன் வளரவில்லை என்பதற்கு இதுதான் காரணம். திராவிட இயக்கங்கள் போல வளரணும் என்றால் அது முடியாது. அந்த இயக்கத்திற்கு அதற்கான தகுதியும் கிடையாது. அண்ணாமலை வாய்க் கொழுப்போடு பேசுவதாக தெரிகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் காரணம். ஜெயலலிதா உடன் ஒப்பிட்டு பேசுவதற்கு எவனுக்கும் தகுதியே கிடையாது.

பிரதமர் மோடி நடவடிக்கை

அவரை போல் எவனும் பிறக்கவும் இல்லை. இனி பிறக்கவும் முடியாது. பாஜக மதிக்கக் கூடிய கட்சியாக இருந்தது. தற்போது அதில் சில விஷமத்தனமான கிருமிகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் கண்டித்து தமிழக பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவில் இருந்து ஆட்களை இழுத்து வந்து அதிமுகவை வளர்க்கும் அளவிற்கு எங்கள் கட்சி மோசமாக செல்லவில்லை.

எடப்பாடியாருக்கு செல்வாக்கு

புத்தெழுச்சியோடு இருக்கிறது. புதிய அலைகளாக வந்து கொண்டிருக்கின்றனர். எடப்பாடியாருக்கு செல்வாக்கு மேல் செல்வாக்காக கூடி வருகிறது. கண்கெட்டவர்களாக தற்போது பேசுகின்றனர். அதற்கெல்லாம் என்ன சொல்வது? அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. அவருக்கு அடக்கம் தேவை என்று தெரிவித்தார். இதனால் இருகட்சிகளுக்கும் இடையிலான மோதல் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது.

அண்ணாமலை ரணகளம்

ஏனெனில் இதற்கு பாஜக தரப்பில் இருந்து விரைவில் பதிலடி கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் அவ்வளவு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்கப்படாது எனத் தோன்றுகிறது. அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியேற்றதில் இருந்தே திராவிடக் கட்சிகளுக்கு எதிராக காரசாரமான கருத்துகளை முன்வைத்து வருகிறார். ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பையும் ரணகளமாய் மாற்றி விடும் அளவிற்கு பேச்சுகள் இடம்பெறுகின்றன.

மக்களவை தேர்தல்

சில சமயங்களில் பத்திரிகையாளர்களையும் அவதூறாக பேசி சிக்கிக் கொள்கிறார். இத்தகைய சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அதிமுக மீதான நிலைப்பாட்டில் அண்ணாமலையிடம் மாற்றம் தெரிகிறது. இதன் நீட்சி எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. அதேசமயம் 2024 மக்களவை தேர்தல் வரை அதிமுக – பாஜக கூட்டணிக்குள் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.