இம்ரான்கான் ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு.. தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் போலீசார் நடவடிக்கை..!

பாகிஸ்தானில், தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான் கான் ஆதரவாளர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் அப்புறப் படுத்தினர். 

இம்ரான் கான் ஆட்சியின் போது கலைக்கப்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட மாகாண சட்டபேரவைகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரச்சாரப் பேரணியை நடத்த திட்டமிட்ட இம்ரான்கான் ஆதரவாளர்கள், லாகூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கூடினர். அப்போது, காவல்துறையினர் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தியபோது, மோதல் வெடித்தது.

இதில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்த நிலையில், இம்ரான் கானின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.