ஐநா. மனித உரிமைகள் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி..!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் காஷ்மீர் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஜக்ப்ரீத் கவுர் , நியுயார்க்கில் ஐநா.மனித உரிமைக் குழுவின் 52வது கூட்டத்தின் 17வது அமர்வில பேசும்போது, இந்தியா பற்றிய தேவையில்லாத விஷயங்களை பாகிஸ்தான் எழுப்புவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அரசியல் ரீதியான அடக்குமுறைகள் ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் மீது ஏவப்படுவதாக குற்றம் சாட்டிய ஜக்ப்ரீத் கவுர், காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் எந்த ஒரு கேள்வியும் பதில் அளிக்கக்கூட தகுதியற்று இருப்பதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.