சர்வதேச நாடுகளில் இலங்கை மரக்கறி – மீன்களின் விலைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்படலாம் (Video)



வெளிநாடுகளில், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பணவீக்கம் 60 தொடக்கம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையில் விலைமட்டங்கள் வெளிநாடுகளில் அதிகரித்தது என்பது உண்மை. ஒருபக்கம் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து குறைவடைந்துகொண்டு போகும் நிலைமை இருந்தாலும் கூட அதனை ஈடுசெய்கின்ற அளவுக்கு இலங்கையினுடைய விலைமட்டங்கள் அதிகரித்து செல்கின்றன. எனவேதான் வெளிநாடுகளில் இலங்கை பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைகின்றது எனவும் குறிப்பிட்டார். 

   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.