பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பீகாரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ அபு டோஜனா இல்லம், லாலுவின் மகள் மிசா பார்தியின் டெல்லி வீடு என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அரசு வேலைக்காக நிலம் லஞ்சமாக பெறப்பட்டதான வழக்கில், லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடம் இரு தினங்களுக்கு முன்பு சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.