ஈரான், சவூதி அரேபியா இடையே மீண்டும் அரசாங்க உறவு… சீனாவின் முயற்சியால் இருதரப்பினரும் சமாதானமாக ஒப்புதல்

சீனாவின் சமரச முயற்சியை அடுத்து ஏழு ஆண்டுகளாக சிதைந்துக் கிடந்த அரசாங்க உறவுகளை மீண்டும் புதுப்பிக்க சவூதி அரேபியாவும் ஈரானும் ஒப்புதல் அளித்துள்ளன.

பேச்சுவார்த்தைகள் மூலமாக  ஈரானுடன் அலுவல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

இருதரப்பினரும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், மத்தியக் கிழக்குப் பகுதியில் இந்த முயற்சி பதற்றத்தைத் தணிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களைத் திறக்கவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.