அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ்பெற்ற சந்தீப் ரெட்டி வாங்கா உடன் அல்லு அர்ஜுன் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் பாலிவுட்டில் உருவாக உள்ள நிலையில், அல்லு அர்ஜுன் இதன் மூலம் தனது முதல் நேரடி இந்தி படத்தில் நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கியுள்ள சம்பளத்தொகை அனைவருரையும் வாயைப்பிளக்க வைத்துள்ளது.
தென்னிந்தியாவில் அதிகம்
மேலும், இதனால், தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்குபவராக அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். புஷ்பா படம் மூலம் பான் இந்தியா அளிவில் உயர்ந்த அவர், தனது அடுத்த படத்திற்காக ரூ. 125 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Been looking forward for this combination for quite some time now . @imvangasandeep garu’s magic is something that personally touches me . Hopefully we give a memorable film that will be remembered for a long long time . pic.twitter.com/i24uOyoFkI
— Allu Arjun (@alluarjun) March 4, 2023
புஷ்பாவுக்கு பின் கிடைத்த வரவேற்பை அடுத்து, மிகுந்த பரபரப்புடன் அவர் பாலிவுட் திரையுலகில் கால் பதிக்க உள்ளார். அதற்காக அவர் பெரும் சம்பளத்தை பெறுவது போல் தெரிகிறது. டி- சீரிஸ் தயாரிப்பிற்காக அல்லு அர்ஜுன் ரூ.125 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலகம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.. இந்த சம்பளத்தின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு நடிகரான பிரபாஸை, அல்லு அர்ஜுன் முந்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபாஸ் தற்போது 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், அல்லு அர்ஜுன் அவரை தாண்டியதால், இது திரையுலகில் ஒரு புதிய டிரெண்டை அமைக்கிறது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆர்ஆர்ஆர் நடிகர்கள்
ஆர்ஆர்ஆர் நட்சத்திரங்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஆர்ஆர்ஆர் வெற்றிக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்றும் தற்போது அவர்களது பழைய கமிட்மென்ட் படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்போது ஆஸ்கார் விருது பெற்ற எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படத்திற்காக தலா ரூ.75 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் எவ்வளவு சம்பளத்தை உயர்த்துவார்கள் என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஆஸ்கார் விருதுகளில் இருந்து திரும்பி வந்து ஏதேனும் புதிய படங்களில் ஒப்பந்தமானால், அவர்கள் அல்லு அர்ஜுன் அல்லது அதற்கு மேல் சம்பளத்தை பெறலாம்.
விஜய் சம்பளம்
இது ஒருபுறம் இருக்க, தென்னிந்தியளவில் அதிக சம்பளத்தை பெற்று வருபவராக நடிகர் விஜய் அறியப்படுகிறார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற வாரிசு படத்தில் நடிக்க, தாயரிப்பாளர் தில் ராஜூவிடம் இருந்து ரூ. 110 கோடி வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது, அல்லு அர்ஜுன் 125 கோடி ரூபாய்க்கு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள நிலையில், தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளத்தை பெறுபவர் பட்டியலில் தற்போதைக்கு அல்லு அர்ஜுன் முதலிடத்தை பிடித்துள்ளார்.