டுவீட் போட்டு நீக்கிய குரேஷி : குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் 1 எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கும் முன் மணிமேகலை திடீரென இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து மற்றொரு காமெடி நட்சத்திரமான குரேஷியும் சீசன் 4லிருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது.

இது உண்மைதானா என ரசிகர்கள் தவித்து வந்த வேளையில் குரேஷியும் தனது டுவிட்டர் பக்கத்தில், 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த நினைவுகளுக்கு நன்றி' என சொல்லி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதை சூசகமாக சொல்வது போல் டுவீட் போட்டிருந்தார். இதனால், அவர் உண்மையிலேயே விலகிவிட்டார் என சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இதனையடுத்து அந்த டுவீட்டை குரேஷி தற்போது நீக்கிவிட்டு, 'உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு' என புதிதாக டுவீட் போட்டுள்ளார். இதனால், அவர் உண்மையிலேயே நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டாரா? இல்லையா என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.