தமிழ்நாட்டில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..

தமிழ்நாட்டில், திருச்சி, சேலம், நாகை, தருமபுரி மற்றும் தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில், ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

புகாரின் பேரில் ஆவடி, அரக்கோணம் உட்பட பல இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆத்தூர், நாகை உட்பட பல இடங்களில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல், இராமநாதபுரத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், கடலூரில் மாநகராட்சி அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை தொடர்கிறது.

அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், பல இடங்களில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.