பெட்டிக்கடையில் டீ ஆத்தும் ‛பாக்கியலட்சுமி' ஹீரோ

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ஹீரோவாக கலக்கி வந்தவர் சதீஷ். சமீபத்திய எபிசோடுகளில் அவரது கேரக்டரை குறைத்து காமெடியனாகவே மாற்றிவிட்டனர். போதாக்குறைக்கு ரஞ்சித் வேறு ஹீரோவாக என்ட்ரி கொடுத்து பாக்கியலட்சுமியிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். ரஞ்சித்தின் என்ட்ரி குறித்து முன்னரே பதிவிட்டிருந்த சதீஷ், இனி பாக்கியலெட்சுமி தொடரில் தனது கேரக்டர் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அதற்கேற்றார் போல் தற்போது பெட்டிக்கடையில் நின்று டீ ஆத்துவது போல் புகைப்படத்தை வெளியிட்டு 'கூடிய சீக்கிரமே ஈஸ்வரி புட் கேண்டீனில் டீ மாஸ்டரா சேர போறேன்' என்று பதிவிட்டுள்ளார். சதீஷின் இந்த நிலைமையை பார்த்து ரசிகர்கள் சிலர் 'கடைசியில ஆள் இல்லாத கடையில டீ ஆத்துற நிலைமைக்கு வந்துட்டீங்களே கோபி!' என கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.