ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென தோன்றிய ஆபாச காட்சிகள்.. அதிர்ச்சியடைந்த பயணிகள்!

பீகாரில், ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பர  திரையில் மூன்று நிமிடங்களுக்கு ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் முகம்சுழித்த நிலையில், ரயில்வே நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது.

ரயில்வே போலீசார் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு வீடியோ காட்சியை உடனடியாக அகற்றினர்.

சம்மந்தப்பட்ட விளம்பர நிறு வனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, செல்போன்களில் பயணிகள் சிலரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவிவருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.