புதுச்சேரி: அடுக்கடுக்காக கேள்வியெழுப்பிய பள்ளி மாணவர்கள் – அசராமல் பதிலளித்த அமைச்சர்

புதுச்சேரியில் அடுக்கடுக்காக பள்ளி மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம். அசராமல் பதிலளித்தார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நடவடிக்கைகளை பள்ளி மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பேரவை மாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அமர்ந்து பார்க்க நாள்தோறும் அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
image
இந்நிலையில் நேற்று சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்தார். இதையடுத்து பேரவையை விட்டு வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயத்திடம் பேரவை நடவடிக்கைகளை காண வந்த மாணவர்கள், காற்று மாசை எப்படி சரிசெய்வீர், போக்குவரத்து நெரிசலை எப்படி கட்டுப்படுத்துவீர், காய்ச்சல் பரவல் எப்படி உள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
image
இதைத் தொடர்ந்து பேரவையில் எம்எல்ஏ-க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து கலைத்து வந்தாலும் மாணவிகள் ஆர்வமுடன் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு அசராமல் பதில் கூறி மாணவிகளை மகிழ்ச்சி ;அடையச் செய்தார். அமைச்சர் என்றும் பாராமல் அவரிடமே பல கேள்விகளை கேட்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.