புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500-ஆக உயர்வு: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.ஏற்கெனவே மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500 ஆக இருந்த நிலையில் ரூ.1,000 உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்று அந்த கோப்பு கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான விடுமுறை கால நிதிஉதவி மற்றும் இயற்கை பேரிடர் கால நிவாரண உதவித் திட்டத்தின்கீழ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதிஉதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் – ரூ. 5,500 இல் இருந்து ரூ.6,500 ஆகவும், விடுமுறைக்கால நிதியுதவி ரூ. 2,500 இல் இருந்து ரூ3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.