அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். அ.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு நடிகர் அஜித்குமார் லைகா தயாரிப்பில் படம் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையில்,

அஜித் குமார் தன் தந்தையுடன்

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது” என சமீபத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியம் உயிரிழந்திருக்கிறார். அவரின் வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.