சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை முழுமையான விடியலாக கருதக்கூடாது – அமைச்சர் டக்ளஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கு கிடைத்த முழுமையான விடியலாக கருதி விடக்கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூச்சு விடுவதற்கான சந்தர்ப்பமாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்பட ஏனைய நிதி நிறுவனங்கள், நாடுகளிடமிருந்து மொத்தமாக 07 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ள முடியுமென்ற தகவலை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த கடன்கள் தொடர்பில் எவரும் வெற்றிக்களிப்பில் மயங்கி விடக்கூடாது. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மூச்செடுக்கக்கூடிய சந்தர்ப்பமாக மட்டுமே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து இதை முழுமையான விடியலென நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.