Ajith: அஜித்தின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்ட தந்தை..பெருமைசேர்த்த அஜித்..!

இன்று இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் முதன்மையானவர் தான் அஜித். திரையுலகில் தனக்கென தனி பாதையை வகுத்து அதில் பயணம் செய்து வரும் அஜித் இன்று தன் தந்தையை இழந்து வாடி வருகின்றார். அஜித்தின் தந்தையான சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.

கடந்த நான்கு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் தன் 84 ஆவது வயதில் இன்று காலமானார். தன் தந்தையின் பிரிவால் வாடும் அஜித்திற்கு திரைத்துறையை சார்ந்தவர்களும், ரசிகர்களும் சமூகத்தளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Ajith: தன் தந்தையை பற்றி முதல்முறையாக பேசிய அஜித்..வைரலாகும் வீடியோ..!

இந்நிலையில் அஜித்தின் எதிர்காலத்தை எண்ணி அவரின் தந்தை சுப்பிரமணியம் ஆரம்பத்தில் மிகவும் பயந்துள்ளாராம். சுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில் அனுப் குமார் மற்றும் அனில் குமார் இருவரும் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்துள்ளனர்.

ஆனால் அஜித் தன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாடலிங் மற்றும் பைக்கில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். படிப்பில் நாட்டம் இல்லாத அஜித்தை தன் நண்பரின் உதவியுடன் பைக் மெக்கானிக் வேலையில் சேர்ந்துள்ளார்.

இதன் காரணமாக அஜித்தின் தந்தை மிகவும் கவலைப்பட்டுள்ளார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பைக் மெக்கானிக்காக அஜித் வேலை செய்கின்றார், அவரின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலை அஜித்தின் தந்தைக்கு இருந்துள்ளது. இதனை புரிந்துகொண்ட அஜித் மெக்கானிக் வேலையை விட்டுவிட்டு கார்மன்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.

பின்பு வியாபாரம், மாடலிங் என செய்து வந்த அஜித் பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வர துவங்கினார். மாடலிங் துறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அஜித்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அடையாளம் கண்டு அவரை படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு அழைத்துள்ளார்.

அதன் பிறகு அஜித் முழுமையாக திரைத்துறையில் ஈடுபட துவங்கினார். தன் தந்தையின் கவலையை உணர்ந்த அஜித் அவர் பெருமைகொள்ளும் வகையில் எதிர்காலத்தில் இந்திய அளவில் பிரபலமானவராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் தன் வாழ்க்கையில் தனக்கு பக்கபலமாக இருந்த தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு அனைவரும் தங்கள் ஆறுதலை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.