Breaking! இனி ராகுல் காந்தி MP இல்லை! மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார் ராகுல்

புதுடெல்லி: ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட  காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தெருவில் இறங்கி போராடப் போவதாக காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. இந்த வழக்கை சட்டரீதியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், வெகுஜனப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.