பெண் விஏஓ தற்கொலை

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள குன்னமாலை பஞ்சாயத்து சிக்கிநாக்கின்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (35). இவர் நாமக்கல்லை அடுத்துள்ள தொட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்துள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்த நடராஜன் மகள் நவீனா (32) என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நவீனா திருச்செங்கோட்டை அடுத்துள்ள பிரிதி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறில் நேற்று முன்தினம் மாலை, நவீனா தற்கொலை செய்து கொண்டார். நவீனாவின் தந்தை நடராஜன், தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நவீனாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து திருச்செங்கோடு கோட்டாட்சியர் கௌசல்யாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.