ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: ஞாயிற்றுக் கிழமை சென்னை கிளம்புறீங்களா?

நான்கு முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளுடன் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை (நாளை) இயக்கப்படுகிறது.

வார இறுதி நாள் பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (06040) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) அன்று மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.

பின்பு மதுரையில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (மார்ச் 27) காலை 06.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.