ஆலங்குடியில் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு சமய வேறுபாடுகளின்றி சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு சமய வேறுபாடுகளின்றி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் சீர்கொண்டு வந்து சிறப்பித்தனர்.

ஆலங்குடி தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 6 மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. நாளை குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து பங்குத்தந்தை தலைமையில் கிறிஸ்தவர்களும், பெரிய பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமியர்களும் தட்டு சீர்வரிசையுடன் கோயிலுக்கு வருகை தந்தனர். அவர்களை கோயில் நிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.