கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 10-11 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை..!

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..

மருத்துவ பரிசோதனைகள், மருத்துவமனைகளின் தயார் நிலைகள், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை ஒத்திகை பார்க்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய வகை மரபணு மாற்ற வைரஸ் பரவலைத் தடுக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.