வழக்கறிஞர் வெட்டிக்கொலை… மர்ம நபர்களின் வெறிச்செயல்..! சென்னையில் பயங்கரம்.!

சென்னையில் மர்ம நபர்களால் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெருங்குடி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(33). இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஜெய்கணேஷ் நேற்று இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது வீட்டின் அருகே ஜெய்கணேஷ் சென்றபோது, அங்கிருந்த மர்ம நபர்கள் ஜெய்கணேஷை கத்தி, அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஜெய்கணேஷை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஜெய்கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஜெய்கணேஷின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு, கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்த பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெய்கணேஷை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.