Karthi: அடடே, நம்ம சிறுத்தை கார்த்தியின் மகளா இது, என்னம்மா வளர்ந்துட்டாப்ல!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
சிவா இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்த சிறுத்தை படம் கடந்த 2011ம் ஆண்டு ரிலீஸாகி வெற்றி பெற்றது. ரத்னவேல் பாண்டியன் ஐ.பி.எஸ்., ராக்கெட் ராஜா என இரண்டு வேடங்களிலுமே அசத்தியிருந்தார் கார்த்தி. அந்த படத்தில் ரத்னவேல் பாண்டியனின் மகளாக பேபி ரக்ஷனா நடித்திருந்தார்.

அந்த க்யூட் பேபி மணிரத்னத்தின் கடல், ஓகே கண்மணி, இலங்கை தமிழர்களை பற்றிய யாழ் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துவிட்டார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தான் ரக்ஷனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி சினிமா ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

பேபி ரக்ஷனா பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 போகிறார். அடேங்கப்பா, கார்த்தியின் மகள் இந்த வேகத்தில் வளர்ந்துவிட்டாரே. பெண் பிள்ளைகள் எப்பொழுதுமே வேகமாக வளர்ந்துவிடுவார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் ரக்ஷனா கூறியதாவது,

நான் விளம்பர படம் ஒன்றில் நடித்திருந்தேன். அதை பார்த்து தான் சிவா அங்கிள் என்னை சிறுத்தை படத்தில் நடிக்க வைத்தார்.

கார்த்தி சார் தன்மையானவர். நான் எத்தனை டேக் வாங்கினாலும் பொறுமையாக இருந்தார். என் பிறந்தநாளுக்கு திடீர் என்று வீட்டிற்கு வந்த நிறைய கிஃப்ட்ஸ் கொடுத்தார். அதை மறக்கவே முடியாது என்றார்.

சிறுத்தை படத்தில் நடித்தபோது ரக்ஷனாவுக்கு மூன்றை வயது ஆகும். ப்ரீகேஜி படித்துக் கொண்டிருந்தார். 6ம் வகுப்பு வரை தொடர்ந்து படங்களில் நடித்தார் ரக்ஷனா. அதன் பிறகு பரதநாட்டியம் கற்கவும், படிப்பில் கவனம் செலுத்தவும் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

பிளஸ் 2 முடித்த பிறகு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் படங்களில் நடிக்கும் ஐடியாவில் இருக்கிறார் ரக்ஷனா. இந்நிலையில் அவர் மீண்டும் கார்த்திக்கு மகளாக நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Aishwarya Rajinikanth: ஏமாத்திட்டீங்க ஐஸ்வர்யா: லால் சலாம் ஹீரோ விஷ்ணு விஷால்

சிறுத்தை படத்தில் நடித்தபோது ரக்ஷனா படுசுட்டியாம். எப்பொழுது பார்த்தாலும் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டே இருந்தாராம். அவரை ஒரு இடத்தில் நிற்க வைத்து நடிக்க வைப்பதே உதவி இயக்குநர்களுக்கு பெரிய வேலையாக இருந்ததாம். அறியாத வயதாக இருந்தாலும் படங்களில் நடித்தது ரொம்ப பிடித்திருந்ததாக ரக்ஷனா தெரிவித்துள்ளார்.

ரக்ஷனாவை பார்க்கும் போது கார்த்தியின் நிஜ மகள் உமையாள் மாதிரியும் இருக்கிறது என ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். கார்த்திக்கு உமையாள் என்கிற மகளும், கந்தன் என்கிற மகனும் இருக்கிறார்கள்.

மகள், மகனின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் பழக்கம் கார்த்திக்கு இல்லை. அதனால் கந்தனின் முகத்தை பார்க்க ஆசையாக இருப்பதாகவும், புகைப்படத்தை வெளியிடுமாறும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கிறார் கார்த்தி. அந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

Ponniyin selvan 2: வந்தியத்தேவன் கார்த்திக்கு குந்தவை த்ரிஷா செய்த அநியாயம்: என்னம்மா இப்படி பண்றீங்களேமா

இந்நிலையில் குந்தவை பிராட்டி த்ரிஷாவுடன் அவ்வப்போது ட்விட்டரில் பேசி வருகிறார். அவர் கேள்வி கேட்க குந்தவையும் பதில் அளிக்கிறார். ஆனால் கார்த்தியை த்ரிஷா ட்விட்டரில் பின்தொடரவில்லை. அது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.