கிராமப்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்தை கட்டியெழுப்ப 500 புதிய பஸ்கள்

கிராமிய வீதிகளில் பொதுப் போக்குவரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள டிப்போக்களுக்கு பேருந்துகளை விநியோகிக்கும் நிகழ்வு நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த பேருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் நாட்டில் உள்ள அனைத்து டிப்போக்களுக்கும் வழங்கப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.