குந்தவை Vs சகுந்தலை : பான் இந்தியாவை கவரப் போவது யார் ?

தென்னிந்தியத் திரையுலகத்தில் ஏப்ரல் மாதம் முக்கியமான ஒரு மாதமாக அமையப் போகிறது. ஏப்ரல் 14ம் தேதி தெலுங்கில் தயாரான 'சாகுந்தலம்' படமும், ஏப்ரல் 28ம் தேதி தமிழில் தயாரான 'பொன்னியின் செல்வன் 2' படமும் பான் இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.

'சாகுந்தலம்' படத்தில் சாகுந்தலை என்ற சரித்திரக் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை என்ற சரித்திரக் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்கள்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில் இருந்த முக்கியத்துவத்தை விட இரண்டாம் கதாபாத்திரத்தில் குந்தவை கதாபாத்திரத்திற்கு நிறைய முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷா முதல் முறையாக சரித்திரக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள படம் இது. அது போலவே 'சாகுந்தலம்' படத்தின் மூலம் முதல் முறையாக சரித்திரக் கதாபாத்திரத்தில் சடித்துள்ளார் சமந்தா.

இருவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பகிரப்பட்டு அதிக லைக்குகளைப் பிடித்துள்ளன. அடுத்த மாதம் அவர்களது படங்கள் வரும் போது ஒப்பீடு செய்யப்பட்டு நிறைய கமெண்ட்டுகள் வர வாய்ப்புண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.