`நீங்களும் ஆரம்பிக்கலாம் இ-சேவை மையம்’ – தமிழக அரசின் அடுத்த அதிரடி!

இ – சேவை மையம்

தமிழக மின்னணு நிறுவனம் மற்றும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக இ- சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் செலுத்தமுடியும்.

இ சேவை மையம்

இது மட்டுமல்லாது, மாநாகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இ.சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணபிக்கவும் முடியும். மக்கள், அரசு அலுவலகங்களுக்கு சென்று சிரமப்படுவதை தடுக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது. இந்த சேவை மையம் மூலம் மக்கள் இணையம் வழியாக அனைத்து அரசு நலன்களையும் பெற முடியும்.

அனைவருக்கும் இ – சேவை

தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ- சேவை மையம் தொடங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில்முனைவோர்களையும் ஊக்குவகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் புதிய மையங்கள் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இ சேவை மையம்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி. நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கி வருகிறது.

இதனை மேம்படுத்தும் வகையில் ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ- சேவை மையங்களை ஏற்படுத்தவும், மாவட்டங்களில் இ – சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து அவர்கள் இருப்பிடத்துக்கே சென்று நேர்த்தியான மற்றும் சிறந்த சேவை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இ- சேவை மையம்

பதிவு செய்வது எப்படி.?

இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இந்த திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் www.tnesevai.tn.gov.in, tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம். ஏப்ரல் 14- ம் தேதி வரை காலை 11.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3000. நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000 ஆகும்.

இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

இந்த இ- சேவை மையம் தொடங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.