தகாத உறவை வெளியில் சொன்ன நரிக்குறவ வாலிபர்.! ஆத்திரத்தில் சக வாலிபர் செய்த கொடூரம்.!

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் அடுத்துள்ள மங்களம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று அதே சமூகத்தைச் சேர்ந்த ரஜினி என்பவருக்கும் அஜித் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது, மது போதையில் இருந்த ரஜினி, திடீரென தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் அஜித்தை சரமாரியாகச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், ரஜினிக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்து வந்ததும், அதனை அஜித் வெளியே சொன்னதால் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து போலீசார் அஜித்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பித்துச் சென்ற ரஜினியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.