Akansha Dubey:பணத்துக்காக கொன்னுட்டாங்க: காதலர், சகோதரர் மீது நடிகை ஆகான்ஷாவின் அம்மா புகார்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Akansha Dubey suicide: ஆகான்ஷா துபே தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாடகர் சமர் சிங் மீது அவரின் அம்மா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

​ஆகான்ஷா துபே​போஜ்புரி படங்களில் நடித்து வந்த ஆகான்ஷா துபே உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு படப்பிடிப்புக்காக சென்றார். அங்கு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 17 வயதில் நடிக்க வந்த ஆகான்ஷா துபே 25வது வயதில் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்நிலையில் ஆகான்ஷாவின் அம்மா மது பேட்டி அளித்துள்ளார்.
​கொலை மிரட்டல்​மது துபே கூறியிருப்பதாவது, போஜ்புரி பாடகர் சமர் சிங் மற்றும் அவரின் சகோதரர் சஞ்சய் சிங் தான் என் மகளின் தற்கொலைக்கு காரணம். என் மகள் செய்த வேலைக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் பணம் கொடுக்கவில்லை. நிறைய பணம் வர வேண்டியிருக்கிறது. மார்ச் 21ம் தேதி சமர் சிங்கின் சகோதரர் சஞ்சய் ஆகான்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதை ஆகான்ஷா எனக்கு போன் செய்து கூறினார் என்றார்.
​குடும்பத்தார்​பண விஷயத்திற்காக ஆகான்ஷாவை கொலை செய்துவிடுவதாக சமர் சிங் மிரட்டினார் என்கிறார்கள் குடும்பத்தார். சமர் சிங்கும், சஞ்சயும் திட்டம்போட்டு ஆகான்ஷாவை கொலை செய்துவிட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். ஆகான்ஷாவின் மரணம் தொடர்பாக சமர் சிங் மற்றும் சஞ்சய் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
​காதல்​ஆகான்ஷா துபேவும், சமர் சிங்கும் காதலித்து வந்தார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சமர் சிங் பற்றி இன்ஸ்டாகிராமில் பாசமாக போஸ்ட் போட்டிருந்தார் ஆகான்ஷா. இந்நிலையில் பணத்துக்காக ஆகான்ஷாவை சமர் சிங் கொன்றுவிட்டார் என அம்மா மது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
​மன அழுத்தம்​கடந்த 2018ம் ஆண்டு ஆகான்ஷா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக கெரியரில் இருந்து பிரேக் எடுத்தாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஆகான்ஷாவுக்கு மனஅழுத்தம் எல்லாம் இல்லை என்று அவரின் மேக்கப் ஆர்டிஸ்ட் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் நடந்த பார்ட்டியில் ஆகான்ஷா கலந்து கொண்டார். அவர் சந்தோஷமாக இருந்தார் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

​அழுகை​​Akansha Dubey:தற்கொலை செய்யும் முன்பு இன்ஸ்டா லைவில் கதறி அழுத நடிகை ஆகான்ஷா​இறப்பதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தன் டான்ஸ் வீடியோவை வெளியிட்டார் ஆகான்ஷா. மேலும் இன்ஸ்டா லைவில் வந்த அவர் கையால் வாயை பொத்திக் கொண்டு அழுதார். ஆனால் அவர் ஏன் அழுதார் என தெரியவில்லை. அவர் கடைசியாக இன்ஸ்டா லைவில் வந்து அழுத வீடியோ வைரலாகிவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.