ஆரோக்கியமாக வாழ வைட்டமின் மாத்திரைகள் அவசியமா? – விளக்கும் மகப்பேறியல் மருத்துவர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

உணவில் காணப்படும் கரிம சேர்மங்களான வைட்டமின்கள், உயிர்வாழ்வதற்கு அவசியம். வளர்ச்சி, ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் நோயிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இவை அவசியம். கொழுப்பில் கரையக்கூடியது மற்றும் நீரில் கரையக்கூடியது என இரண்டு வகை வைட்டமின்கள் உள்ளன.

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் உள்ளன. அவை உடலில் சேமிக்கப்படுகின்றன. நீரில் கரையக்கூடிய வைட்டமின்களைப் போல அவை விரைவாக உடல் கழிவுகளுடன் வெளியேற்றப்படுவதில்லை. மறுபுறம், நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் பொதுவாக உடலில் சேமிக்கப்படுவதில்லை, அவை தொடர்ந்து உட்கொள்ளப்பட்டு வரவேண்டும். சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இதில் அடங்கும்.

Representational Image

உடலுக்கு வைட்டமின்களைத் தரும் முக்கிய ஆதாரங்கள் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளே. பால் பொருள்கள், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் ஊட்டமேற்றப்பட்ட தானியங்கள் போன்ற வலுவூட்டப்பட்ட உணவு வகைகள் வைட்டமின்களின் பிற ஆதாரங்களில் அடங்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வைட்டமின்கள் அவசியம், ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் வாழ வைட்டமின் துணைமருந்துகளை எடுக்க வேண்டியது அவசியமா என்பது குறித்துப் பார்ப்போம்.

Representational Image

வைட்டமின் துணைமருந்துகள் என்றால் என்ன?

இயற்கையான வழிமுறைகள் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களைப் பெற முடியாதபோது, ​​​​துணைமருந்துகள் தேவைப்படுகின்றன. வைட்டமின் துணைமருந்துகள் என்பவை வைட்டமின்களின் செறிவூட்டப்பட்ட வடிவமாகும். அவை உணவுக்கு துணையாக மாத்திரை, பொடி அல்லது திரவமாக எடுக்கப்படுகின்றன.

ஒரு நபரின் உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து இடைவெளிகளை நிரப்ப அவை பயன்படுத்தப்படுகின்றன. வைட்டமின் துணைமருந்துகளில் மிகவும் பொதுவான வகை மல்டிவைட்டமின் ஆகும். இது ஒரு நபர் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான அனைத்து அத்தியாவசிய வைட்டமின்களின் கலவையாகும்.

வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் போன்ற ஒற்றை வைட்டமின் துணைமருந்துகளும் உள்ளன. இவை ஒரு நபரின் உணவில் இல்லாத குறிப்பிட்ட வைட்டமினை தருவதற்காக உட்கொள்ளப்படுகின்றன. சிலர் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரோபயாடிக்குகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற மருந்து போன்ற சிறப்பு துணைமருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

Representational Image

துணைமருந்துகளை உட்கொள்வதற்கு முன் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:

  • வைட்டமின் துணைமருந்துகள் ஒரு நபரின் உணவில் இருக்கும் ஊட்டச்சத்து இடைவெளிகளை நிரப்ப பயன்படுகின்றன, அதே நேரம் அவை சமச்சீரான உணவை சாப்பிடுவதற்கு மாற்று கிடையாது.

  • துணைமருந்துகள் எடுத்துக்கொள்வதற்கு முன், குறிப்பாக ஒருவர் கர்ப்பமாக இருந்தால் அல்லது ஏதேனும் மருத்துவ பிரச்சினைகளைக் கொண்டிருந்தால், மருத்துவரை அணுகுவது முக்கியம்.

  • துணைமருந்துகள் பொதுவாக அமெரிக்க உணவு மருந்து நிர்வாக அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால், மருந்துகள் போன்ற கடுமையான பரிசோதனைகளுக்கு அவை உட்படுத்தப்பட வேண்டியதில்லை.

  • அதிகப்படியான வைட்டமின்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய விளைவுகளைத் தவிர்க்க, மருத்துவர் கூறியபடியே ஒருவர் துணைமருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

Representational Image

துணைமருந்துகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் நோயைத் தடுக்கவும் உதவும். குறிப்பாக சமச்சீர் உணவு இல்லாமல் போவது, நோய் அல்லது வயதின் காரணமாக குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவும்.

துணைமருந்துகள் மற்ற மருந்துகளுடன் சேரும்போது உடலில் மாற்றம் ஏற்படலாம். எனவே, ஏதேனும் துணைமருந்துகளை உட்கொள்வதற்கு முன் மருத்துவ வழிகாட்டுதலைப் பெறுவது முக்கியம். கூடுதலாக, குறிப்பிட்ட ஒரு வைட்டமினை அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது மற்றும் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கலாம், இது துணைமருந்துகளை உட்கொள்வதற்கு முன் மருத்துவ உதவியை நாடுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

கூடுதலாக, எந்தவொரு துணைமருந்தையும் உட்கொள்வதற்கு முன், குறிப்பாக கர்ப்பமாக இருந்தால், தாய்ப்பால் கொடுக்கும்போது அல்லது ஏதேனும் மருத்துவ பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது முக்கியம்.

-டாக்டர் ராஜ்ஸ்ரீ ஜெ. ஷங்கர்

மகப்பேறியல் மருத்துவர், அப்போல்லோ கிராடில் அண்ட் சில்ரன்ஸ் மருத்துவமனை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.