வேங்கைவயல் மர்மம் | தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு! உயர்நீதிமன்றம் பிறப்பித்த விசாரணை ஆணையம்!

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்ததாக தெரியவந்தது. 

இந்த விவகாரத்தில் மனித கழிவை கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் பல்வேறு அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்த நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

கடந்த தொடர்ந்து 3 மாதத்திற்கும் மேல் விசாரணை செய்துவரும் சிபிசிஐடி போலீசார், தற்பொழுது வரை யாரையும் கைது செய்யவில்லை. 

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், “இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது?” என்று கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையம்” அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஆணையத்தை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.