Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 விழாவில் கார்த்திக் – ஜெஸ்ஸி.. இணையத்தில் பறக்கும் மீம்ஸ்..!.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியானது. பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க போராடிக்கொண்டிருந்த மணிரத்னம் ஒரு வழியாக இக்கதையை இரண்டு பாகங்களாக எடுத்து அதில் முதல் பாகத்தை கடந்தாண்டு வெளியிட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைக்கா மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரித்த இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பொன்னியின் செல்வன் கதையை படித்தவர்களும் இப்படத்தை கண்டு ரசித்தனர்.

Pathu thala: பத்து தல படத்தின் இயக்குனர் மாற்றம்..வெளியான உண்மை காரணம்..!

இதன் காரணமாக இப்படம் இந்தியளவில் வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் திரையில் வெளியாக இருக்கின்றது. இருப்பினும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்திற்கு இல்லாதது சற்று ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் படம் வெளியாக ஒரு மாதகாலம் இருப்பதால் தற்போதே படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மிகப்பிரமாண்டமாக நடந்து வருகின்றது.

முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினி இவ்விழாவில் பங்கேற்கவில்லை என்றாலும் உலகநாயகன் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். மேலும் நடிகர் சிம்புவும் இவ்விழாவில் பங்கேற்பது அவரது ரசிகர்களை உற்சாகமாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துவங்கவுள்ள நிலையில் அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதாவது சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் பொன்னியின் செல்வன் 2 விழாவில் பங்கேற்கின்றனர். அதுவும் இருவரின் இருக்கையும் அருகருகில் இருப்பதால் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி இவ்விழாவின் மூலியமாவது ஒன்று சேரட்டும் என மீம்ஸ் போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி பிரிந்ததை இன்றளவும் ரசிகர்கள் மறக்காமல் இருக்கின்றனர். அந்த அளவிற்கு அப்படம் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.