பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதில் தயக்கம்.. அரபு நாடுகளிடம் கியாரண்டி கேட்கும் IMF!

இஸ்லாமாபாத்: கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், IMF விரைல் கடன் கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், பல கடுமையான நிபந்தனைகள் மற்றும் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், பாகிஸ்தானுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. பாகிஸ்தானை நம்பாத சர்வதேச நாணய நிதியம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட இஸ்ளாமிய நாடுகளிடம், பாகிஸ்தானுக்கான நிதி உதவி அளித்தால், அது திரும்ப கிடைக்கும் என கியாரண்டியை அளிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் என கோரி வருகிறது. கடன் உதவி குறித்தும் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருதரப்பு நண்பர்கள் நிதி உதவி வழங்குவார்கள் என்று பாகிஸ்தான் நம்புகிறது. பாகிஸ்தானின் பல கோரிக்கைகளுக்குப் பிறகும் சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மறுபுறம், நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு IMF நிதி உதவி அறிவித்துள்ளது.

இருதரப்பு நாடுகளின் ஒப்புதல் மற்றும் உறுதிமொழி

நிதி தொடர்பான செனட் ஸ்டாண்டிங் கமிட்டியில் பங்கேற்ற பிறகு, பாகிஸ்தானின் நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஆயிஷா கவுஸ் பாஷா, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார். IMF நிதியை வழங்க, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட இருதரப்பு நாடுகளின் ஒப்புதல் மற்றும் உறுதிமொழி மட்டுமே இப்போது நிலுவையில் உள்ளது என்றார். அவர் மேலும், கூறுகையில், இருதரப்பு நண்பர்களிடமிருந்து நிதி உதவி மிக விரைவில் வரக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. IMF உடனான பணியாளர் நிலை ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்த உதவி உதவும் என்றார்

பாகிஸ்தானுக்கான சர்வதேச நாணய நிதிய உதவி

பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கான பரிந்துரை எதுவும் இல்லை என்று ஆயிஷா கௌஸ் தெளிவுபடுத்தினார். இதற்கிடையில், பாகிஸ்தான்  அந்நிய செலாவணி சங்கத்தின் தலைவர் மாலிக் பாஸ்டன் செனட் குழுவிடம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கத்திற்கு மாதத்திற்கு 1 பில்லியன் டாலர் வழங்க முடியும் என்றும், அதன் பிறகு IMF நிதி உதவி தேவையிருக்காது என்றும் கூறினார். கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 180 பில்லியன் டாலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 1998 அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு 10 பில்லியன் டாலர்களை இந்த அமைப்பிற்கு கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் நெருக்கடி… குறைந்தபட்ச கடனாவது தாங்க… கையேந்தும் பாகிஸ்தான்!

IMF உடனான ஒப்பந்தம் காலதாமதம் ஆவதன் காரணம்

செனட் குழு கூட்டத்தில், ஒன்பதாவது மதிப்பாய்வை முடிப்பதற்கு வெளிப்புற நிதி மட்டுமே தடையாக உள்ளது என்று ஆயிஷா கௌஸ் கூறினார். அது விரைவில் கிடைத்து விடும் என்று நம்புகிறேன். சீனா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்திற்கு நட்பு நாடுகளிடமிருந்து ஒப்புதல் மற்றும் உறுதி மொழி தேவைப்படுவதால், இந்த செயல்முறைக்கு நேரம் எடுத்துக்கொள்வதாகவும், சரிபார்த்த பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மூன்று நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க | தன் வினை தன்னை சுடும்…. பாகிஸ்தானை விழுங்க ஆரம்பிக்கும் பயங்கரவாத அரக்கன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.