பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ்சின் தெற்கு கடற்கரை பகுதியில் பயணிகள் படகில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாகவும், 230 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து ஜோலோ தீவுக்கு சென்று கொண்டிருந்த லேடி மேரி ஜாய் என்ற படகு, பலுக்-பாலுக் தீவுக்கு அருகில் சென்றபோது திடீரென தீ விபத்து நிகழ்ந்தது.

தகவலறிந்த கடலோரக்காவல்படை மற்றும் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, 35 பணியாளர்கள் மற்றும் பயணிகளை மீட்டனர்.

விபத்தில் 14 பேர் காயமடைந்ததாகவும், 7 பேரின் விபரங்கள் தெரியவில்லையெனவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.