கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு -போலீசார் விசாரணை

சேலம் அருகே 5 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மாபேட்டையைச் சேர்ந்த கார்த்தி – சந்தியா தம்பதிக்கு ஓராண்டுக்கு முன் திருமணமான நிலையில், சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டின் முன் குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த போது அசெளகரியத்தை உணர்ந்த சந்தியா, கால்வாய்க்கு அருகே சென்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்த போதே மயக்கமுற்று உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில், சந்தியாவின் சுவாசக்குழாய்க்குள் கழிவு நீர் புகுந்ததாகவும் சொல்லப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், கால்வாயில் மூழ்கிக்கிடந்த சந்தியாவை மீட்டு தனியார் மருத்துமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.