பிரதமரின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை வெளியிடத்தேவையில்லை-கெஜ்ரிவாலுக்கு உயர்நீதிமன்றம் அபராதம்

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருக்கும் குஜராத் உயர்நீதிமன்றம், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

பிரதமரின் கல்வித்தகுதி குறித்த சான்றிதழ்களைக் கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதன் பேரில் மத்திய தகவல் ஆணையமும் பிரதமர் அலுவலகம், குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்திடம் விவரங்களை கேட்டிருந்தது. இதனை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின்போது ஒருவரின் குழந்தைத்தனமான மற்றும் பொறுப்பற்ற ஆர்வத்தை திருப்திப்படுத்துவதற்காக இதுபோன்ற தகவலை வழங்குமாறு நாங்கள் கேட்க முடியாது என அரசு தலைமை வழக்கறிஞர் சார்பில் வாதிடப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.