கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெ. மாஜி கார் டிரைவர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி திடீர் சோதனை: இடைப்பாடி அருகே பரபரப்பு
சேலம்: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜின் உறவினர் வீட்டில், சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில், அவரது கார் டிரைவராக இருந்த சேலம் மாவட்டம் இடைப்பாடி, சமுத்திரத்தை சேர்ந்த கனகராஜ் தலைமையில், கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவனான சயான் உள்ளிட்டோர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் பிடியில் சிக்குவதற்குள், மர்மமான முறையில் கனகராஜ் ஆத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கில் பல்வேறு … Read more