கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெ. மாஜி கார் டிரைவர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி திடீர் சோதனை: இடைப்பாடி அருகே பரபரப்பு

சேலம்: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜின்  உறவினர் வீட்டில், சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில், அவரது கார் டிரைவராக இருந்த சேலம் மாவட்டம் இடைப்பாடி, சமுத்திரத்தை சேர்ந்த கனகராஜ் தலைமையில், கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவனான சயான் உள்ளிட்டோர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் பிடியில் சிக்குவதற்குள், மர்மமான முறையில் கனகராஜ் ஆத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கில் பல்வேறு … Read more

நாட்டு நலனுக்காக கெஜ்ரிவால் 7 மணி நேர தியானம்

புதுடெல்லி: நாட்டு நலனுக்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று  7 மணி நேர தியானம் இருந்தார். டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் கைது நடவடிக்கை கவலை அளிப்பதாக கூறிய முதல்வர் கெஜ்ரிவால், நாட்டு நலனுக்காக ஹோலி பண்டிகையன்று நாள் முழுவதும் தியானம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், ‘’மக்களுக்கு நல்ல கல்வியும் சுகாதார வசதிகளும் கொடுத்தவர்களை சிறையில் அடைக்கும் … Read more

மேற்கத்திய நாடுகள் மீது சிங்கப்பூர் அமைச்சர் புகார்| Singapore Minister complains about Western countries

சிங்கப்பூர், ”உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருப்பது சரியல்ல,” என, சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் குற்றஞ்சாட்டி உள்ளார். ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் ‘நேட்டோ’ அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஓராண்டைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போருக்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் … Read more

தஞ்சாவூர் – பருத்திக்குடியில் பள்ளி மேற்கூரை விழுந்து 3-ம் வகுப்பு மாணவர் படுகாயம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பருத்திக்குடியில் பள்ளி மேற்கூரை விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்த நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருவிடைமருதூர் வட்டம், வளையாவட்டத்தில், பருத்திக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 20 ஆண்டு பழமையான இப்பள்ளி கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 2 ஆசிரியர்கள் உள்பட 18 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடியும் நேரத்தில், பள்ளியின் மேற்கூரை திடிரென பெயர்ந்து விழுந்தது. … Read more

எம்பாப்பே ஆபத்தான வீரர்! அவரை தடுக்க..பாயர்ன் முனிச் நட்சத்திர வீரரின் திட்டம்

PSG அணி வீரர் கைலியன் எம்பாப்பேவை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என பாயர்ன் முனிச் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் கூறினார். பாயர்ன் முனிச் – பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மோதல் ஜேர்மனியில் இன்று நடக்கும் போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் மற்றும் பாயர்ன் முனிச் அணிகள் மோதுகின்றன. நெய்மர் இல்லாததால் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே அணியை முன்னெடுத்து செல்ல அதிக பொறுப்பை வகிக்க உள்ளனர். ஏற்கனவே PSG அணியை பாயர்ன் முனிச் வீழ்த்திய … Read more

குழாய் உடைந்த விவகாரத்தில் சிபிசிஎல் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

நாகப்பட்டினம்:  நாகப்பட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமம் வழியாக சென்னை பெட்ரோலிய  கார்ப்பரேஷனுக்கு (சிபிசிஎல்) சொந்தமான கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் கடந்த 2ம் தேதி உடைப்பு ஏற்பட்டு கடலில் கச்சா எண்ணெய் கலந்தது. குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சுற்றுச்சூழல்துறை  அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், இங்கு சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான குழாய்களை முழுமையாக அகற்ற கோரி கடந்த 3ம் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் … Read more

லண்டன் பேச்சு ராகுலுக்கு ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரின் மகன் கடும் கண்டனம்

ஜெய்ப்பூர்: லண்டனில்  ராகுல் காந்தி பேசியதற்கு ராஜஸ்தான் மாநில அமைச்சரின் மகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பேசியிருந்தார். இதற்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரின் மகன் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சுற்றுலாத் துறை அமைச்சராக விஷ்வேந்திர … Read more

தனித்துவமான இயக்குனர் வெற்றி மாறன் : இளையராஜா புகழாரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். உணர்வுபூர்வமான கதையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. சென்னையில் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சூரி வெற்றிமாறன் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். … Read more