கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்

திருப்புவனம்: கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் அருங்காட்சியகம் ரூ.18 கோடியே 41 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

நேற்று முன்தினம் வரை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கட்டணமின்றி இலவசமாக  பார்த்து சென்றனர். தொல்லியல் துறை சார்பில் நேற்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தை, நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், இவர்களது மகன் நடிகர் சூர்யா, இவரது மனைவி ஜோதிகா மற்றும் இவர்களது குழந்தைகள் தேவ், தியா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி சு.வெங்கடேசனும்  உடனிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.