எடப்பாடிக்கு மீண்டும் ஒரு அக்னி பரீட்சை… ஓபிஎஸ்க்கு முன்னால் ஒரே ஒரு சான்ஸ்!

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை இரண்டே வகைகளில் தான் முடிவெடுக்க முடியும். ஒன்று எம்.எல்.ஏ, எம்.பிக்களின் எண்ணிக்கை. மற்றொன்று பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை. இவை இரண்டுமே எடப்படி பழனிசாமி பக்கம் தான் இருக்கிறது. ஆனால் கட்சியின் சட்ட விதிகள் சாதகமாக இல்லை.

அதிரடி

இதில் திருத்தம் கொண்டு வந்து தனக்கு சாதகமாக எடப்பாடி மாற்றிக் கொண்டார். இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இதற்காக தான் நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்கு தீர்க்கமான முடிவு கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அதற்குள் கர்நாடக சட்டமன்ற தேர்தல் வந்து பரபரப்பை பற்ற வைத்தது. விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது. இந்த விஷயத்தை முன்வைத்து தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணையம் உத்தரவு

ஒருபுறம் நீதிமன்ற வழக்குகள், மறுபுறம் தேர்தல் ஆணைய ஆலோசனை என அரசியல் களம் அனல் பறந்தது. ஒருவழியாக தீர்வு கிடைத்துவிட்டது. இந்திய தேர்தல் ஆணையம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவை இன்று (ஏப்ரல் 20) பிறப்பித்துள்ளது. அதாவது, பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இதனால் இரட்டை இலை சின்னமும் கிடைத்துவிட்டது. அதேசமயம் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டவை எனக் கூறப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் அங்கீகாரம்

இருப்பினும் இது ஆக்கப்பூர்வமான முடிவாகவே பார்க்கப்படுகிறது. கர்நாடக தேர்தலில் எடப்பாடி தரப்பு போட்டியிடும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சாதகமாக மாறியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் எடப்பாடியின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் வெற்றிக்கு மிக அருகில் இருப்பது அவசியம். வெறும் சில ஆயிரம் வாக்குகள் தான் கிடைத்தது என்றால் எடப்பாடிக்கு பின்னடைவாக மாறும். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

கர்நாடக தேர்தல்

எனவே எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் உரிய நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிடுவார் எனக் கூறப்படுகிறது. இந்த தேர்தல் கிட்டதட்ட மற்றொரு அக்னி பரீட்சையாக எடப்பாடி தரப்பிற்கு மாறியிருக்கிறது. மறுபுறம்

பெரிதும் நம்பியிருந்த தேர்தல் ஆணையம் அவரை கைவிட்டு விட்டது. தற்போது அவருக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தனிக்கட்சி தொடங்குவது மட்டுமே என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஓபிஎஸ்க்கு வாய்ப்பு

ஆனால் நீதிமன்றத்தில் தங்களுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஏன், தேர்தல் ஆணையமே தனது உத்தரவை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்தால் அதைக் கொண்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுப்போம் என நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.