திமுக எம்.எல்.ஏ வீட்டில் ஐடி ரெய்டு: மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்!

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகங்கள், அதன் உரிமையாளர்கள், நிர்வாகிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதல்வரின் மருமகன் சபரீசன் சிறப்பு யாகம்!

வருமான வரித்துறை சோதனைக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமான நண்பர் கார்த்திக். அதே போல் ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலாவும் சபரீசனுக்கு நெருக்கமான நண்பர்.

2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையினர் சபரீசன் வீட்டில் சோதனை செய்த போது கார்த்திக் வீட்டிலும் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வீட்டு முன் கூடிய திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து அங்கு அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பழி வாங்கும் நோக்கோடு திமுகவை குறிவைத்து இந்த சோதனையை நடத்துவதாக சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாஜகவுக்கும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் கிளம்பிய நிலையில் அதை திசை திருப்புவதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இது முழுக்க முழுக்க அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று அங்கிருந்த திமுகவினர் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.