மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் – ஒருவர் பலி

மத்திய உக்ரைனிய நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின.

இதில் மருத்துவமனை கட்டிடம் தீப்பற்றியதோடு, சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இடுபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்குள் சிக்கிய 15க்கும் மேற்பட்டோரை ரத்தக் காயங்களுடன் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி, ரஷ்ய படைகள், மீண்டும் தாங்கள் மனிதாபிமானம் அற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளதாக சாடியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.