மீண்டும் சூடு பிடித்த தென்மேற்கு பருவமழை: கேரளா, கர்நாடகாவில் கொட்டும் கனமழை!

ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் கனமழையை பெற்று வருகின்றன.

தமிழ்நாட்டிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்
கனமழை
பெய்து வருகிறது. குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை Vs கமல்ஹாசன்: கோவையை பிடிக்க கடும் போட்டி – யாருக்கு வாய்ப்பு?

கேரளாவில் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் இந்த இன்று மூன்று மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாள்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் (ஜூலை 24, 25) 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்திலும் கடற்கரை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . உடுப்பி, குடகு, தர்வாட் மாவட்டங்களில் இன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெல்கவி, யாட்கிர், தர்வாட், பிடார் மாவட்டங்களில் மஞ்சள் எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் நிறைய பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.