ரஜினி வேண்டாம் என்ற தயாரிப்பாளர்..அடம்பிடித்து ரஜினியை நடிக்க வைத்து ஹிட்டடித்த மகேந்திரன்.. முள்ளும் மலரும் பிளாஷ்பாக்..!

தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தோடு வலம் வருபவர் தான் ரஜினி. கருப்பு வெள்ளை காலகட்டத்தில் துவங்கி 3D தொழில்நுட்பம் வரை ரஜினி நடித்து வருகின்றார். என்னதான் காலங்கள் ஓடினாலும் இவருக்கு என்று தனி ஒரு மவுசு இருந்து தான் வருகின்றது.

சமீபகாலமாக ரஜினியின் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றாலும் இன்றும் ரஜினி சூப்பர்ஸ்டாராகவே வலம் வருகின்றார். இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்ததாக ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.

ரஜினியுடன் மகேந்திரன்

இதையடுத்து ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகவுள்ளது.

Vidaamuyarchi: அஜித்தின் கதை – திரைக்கதையில் உருவாகும் படம்..சத்தமே இல்லாமல் AK செய்யும் சம்பவம் ..!

இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரஜினியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மறைந்த புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் ரஜினியை அடம்பிடித்து முள்ளும் மலரும் படத்தில் நடிக்கவைத்த சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகிவுள்ளது.

1978 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜினியை தான் ஹீரோவாக நடிக்க வைக்க ஆசைப்படுகின்றேன் என தயாரிப்பாளரிடம் மகேந்திரன் கூறியுள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர், ரஜினி வேண்டாம், வேறொரு ஹீரோவை நடிக்கவைக்கலாம் என்றார்.

ஆனால் மகேந்திரன் விடாப்பிடியாக ரஜினி தான் முள்ளும் மலரும் படத்தில் நடிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த படமே எனக்கு வேண்டாம் என்றார். எனவே மகேந்திரன் பிடிவாதமாக இருந்ததால் தயாரிப்பாளரும் ரஜினியை நடிக்க வைக்க சம்மதித்தார். ஆனால் தயாரிப்பாளருக்கு ரஜினி இக்கதாபாத்திரத்தில் செட் ஆவார் என துளி கூட நம்பிக்கையில்லை.

முள்ளும் மலரும் பிளாஷ்பாக்

இந்நிலையில் ரஜினி தன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்து தயாரிப்பாளரின் கணிப்பை பொய்யாக்கினார். இதைத்தொடர்ந்து ரஜினியை வைத்து ஜானி என்ற மெகாஹிட் படத்தையும் மகேந்திரன் இயக்கினார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் ரஜினியிடம் உங்களுக்கு இயக்குனர்களில் பிடித்த இயக்குனர் யார் என கேட்டால் இயக்குனர் கே.பாலசந்தருக்கு பிறகு மஹேந்திரனை தான் கூறுவார். அந்த அளவு ரஜினிக்குள் இருக்கும் ஒரு நடிகரை வெளிக்கொண்டு வந்த பெருமை இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.