அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த ஷாக்… 80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் போச்சு… அடுத்த பிளான் இதுதான்!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும், ஏற்கனவே உள்ள அங்கீகாரத்தை தக்க வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு மிகவும் அவசியம்.

லிஸ்ட் எடுத்த அண்ணா பல்கலைக்கழகம்இதுதவிர மாணவர்களுக்கான வசதிகள், தேர்வு நடைமுறைகள், தேர்ச்சி விவரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக அவ்வப்போது சில வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்து கொண்டிருக்கிறது. இனி விஷயத்திற்கு வருவோம். தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகளுக்கு செக் வைக்க அண்ணா பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது.சிக்கிய 80 பொறியியல் கல்லூரிகள்இதுதொடர்பாக லிஸ்ட் ஒன்றை தயாரிக்கையில் 80 பொறியியல் கல்லூரிகள் சிக்கிக் கொண்டன. உடனடியாக அவற்றின் அங்கீகாரத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது, தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இப்படியே விட்டால் சரிவராது எனக் கருதி, மேற்குறிப்பிட்ட 80 கல்லூரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
​ஆய்வு செய்து விவரங்கள் சேகரிப்புஅப்போது, போதிய வகுப்பறை வசதிகள், போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கை, பேராசிரியர்கள் பணி நியமனம், ஆய்வக வசதிகள், நூலக வசதிகள் உள்ளிட்டவை இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்படும். எந்தெந்த விஷயங்களில் குறைகள் இருக்கிறதோ, அவை அனைத்தும் குறித்து வைத்து கொள்ளப்படும். இவற்றை சரிசெய்வதற்கு போதிய கால அவகாசம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அளிக்கப்படும்.​வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்இதற்கிடையில் மாணவர்களின் நலன் மிகவும் முக்கியம். தற்போது அங்கீகாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் கல்லூரிகளில் தொடர்ந்து படிப்பதில் மாணவர்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். எனவே அவர்களை வேறு கல்லூரிகளில் சேர்த்து கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.
​இணைப்பு கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைவேறு எந்தெந்த கல்லூரிகளில் சேரலாம் என்ற லிஸ்ட் அளித்து சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பொறியியல் கல்லூரி மாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் புதிய விதிமுறைகளின் படி இணைப்பு கல்லூரிகளை உறுதி செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
​மதிப்பெண்கள் நியமனம்இது நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் இருந்தே நடைமுறைக்கு வந்தது. கல்லூரி பேராசிரியர்கள் முதல் நேரடி ஆய்வு வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. தங்கள் இணைப்பை நீட்டிக்க மொத்தம் 486 கல்லூரிகள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் சிறப்பு சலுகைகளின் கீழ் 49 கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
குறைந்த மதிப்பெண்கள்அதேசமயம் 96 பொறியியல் கல்லூரிகள் 50 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. அதில் 80 கல்லூரிகளின் நிலை மிக மோசமாக இருந்ததாக தெரிகிறது. அவற்றை தேர்வு செய்து தான் தற்போது செக் வைக்கப்பட்டிருப்பதை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மாணவர்களின் நிலை சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.