அண்ணாமலை நடை பயணமா செய்கிறார்? கடுமையாக சாடிய கேஎஸ் அழகிரி!

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை இன்று 8வது நாளாக நடை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை 8வது நாளான இன்று மதுரை மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நடை பயணத்தின் போது திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சாதனைகளையும் விளக்கி வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அண்ணாமலையும் மக்களின் குறைகளை கேட்டறிவதோடு புகார் மனுக்களையும் பெற்று வருகிறார்.

காங்கிரஸ் கொடியை தலைகீழாக ஏற்றிய கே.எஸ்.அழகிரி!

இந்நிலையில் அண்ணாமலையின் நடை பயணத்தை தமிழக

தலைவர்

கடுமையாக விமர்சித்துள்ளார் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார் கேஎஸ் அழகிரி. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி, தமிழகத்தில் அண்ணாமலை மேற்கொண்டு வருவது நடைபயணம் அல்ல என்றார்.

மேலும் நடைபயணம் செய்வதாக சொல்லிவிட்டு அண்ணாமலை சொகுசு பயணம் செய்கிறார் என்றும் கேஎஸ் அழகிரி விமர்சித்தார். தமிழகத்தில் ஆளுங்கட்சியை விளம்பரத்திற்காகவே குறை சொல்கிறார்கள் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவரான கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.