Jailer: ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு ரஜினி சொன்ன விமர்சனம்..படம் எப்படி இருக்கு தெரியுமா ?

​எதிர்பார்ப்பில் ஜெயிலர்ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையில் வெளியாகவுள்ளது. அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இதன் காரணமாக ஜெயிலர் திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. மேலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவதால் இப்படத்திற்கு முன்பதிவும் அமோகமாக இருந்து வருகின்றது.

​சாதனைஜெயிலர் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. முதலில் ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா என்ற பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இதையடுத்து ஹுக்கும் என்ற மாஸான பாடல் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் தான் இந்த பரபரப்பிற்கு காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாராம் நடைபெற்றதை அடுத்து இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தியதற்கு இப்படத்தின் பாடல்களும் ஒரு முக்கிய காரணம் எனலாம்

​ட்ரைலர்சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் ட்ரைலர் வெளியானது. படத்தின் கதையை வெளிக்காட்டாமல் ட்ரைலரை செம மாஸாக கட் செய்து வெளியிட்டு அனைவரது பாராட்டையும் பெற்றார் நெல்சன். இந்த ட்ரைலரை பார்க்கும்போது ஜெயிலர் திரைப்படம் முழுக்க முழுக்க நெல்சனின் ஸ்டைலில் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் டார்க் காமெடி ஜானரில் ரஜினியை காணவும் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். குறிப்பாக இந்த ட்ரைலரில் பிளாஷ்பாக் போர்ஷன்ஸ், மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், தமன்னா ஆகியோர் இடம்பெறவில்லை. எனவே இவர்கள் படத்தில் சஸ்பென்சான கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

​ரஜினியின் விமர்சனம்நேற்று அனிருத் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் படம் சிறப்பாக இருப்பதை உணர்த்துவதாக எமோஜி ஒன்றை போட்டிருந்தார். இதையடுத்து தற்போது ரஜினி சமீபத்தில் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறியதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ரஜினி இதற்கு முன்பே ஒருமுறை ஜெயிலர் படத்தை பார்த்துள்ளார். இருந்தாலும் சென்சாருக்கு பிறகு பின்னணி இசையெல்லாம் சேர்த்த பிறகு தற்போது ஜெயிலர் திரைப்படத்தை முழுவதுமாக பார்த்துள்ளார் ரஜினி. படத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் , படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும் கூறி ,நெல்சனை கட்டியணைத்து பாராட்டியுள்ளாராம் ரஜினி. இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.