புதுக்கோட்டை: வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக கூறி, வருமான வரித்துறை கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12-ம் ஆண்டு […]
