காடுகளை உருவாக்குவதில் யானைகளின் மிகவும் முக்கியமானது. ஒரு யானை தனது வாழ்நாளில் கிட்டதட்ட ஒரு முழு காட்டையே உருவாக்கி விடுகிறது. இவை உருவாக்கி செல்லும் வழித்தடங்கள் தான் மற்ற விலங்குகளுக்கு பாதையாக அமைகிறது. ஏன் மனிதர்களுக்கும் அப்படித்தான் எனலாம். காடுகளை அழிப்பது, மனிதர்கள் – விலங்குகள் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் இடம்பெயர தொடங்கி கடைசியில் மனிதர்கள் வாழும் இடத்திற்குள்ளேயே நுழைந்து விடுகிறது.
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம்
யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை
இதனால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம். எனவே யானைகளை அதற்குரிய வனப்பகுதியிலேயே பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இதையொட்டி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் ”ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023” என்ற பெயரில் முக்கியமான அறிக்கையை தமிழக முதலமைச்சர்
இன்று வெளியிட்டார்.
மே மாத கணக்கெடுப்பு
அப்போது, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த அறிக்கையை தயாரிப்பதற்கான கணக்கெடுப்பு கடந்த மே 17 முதல் 19 வரை நடைபெற்றது. இதற்காக கேரளா, கர்நாடகா ஆகிய அரசுகளின் ஒத்துழைப்பும் நாடப்பட்டன.
Elephant Report 2023
இனத்தொகை கட்டமைப்பு
அதாவது, யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராயும் நோக்கில் இத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு யானை சரகங்களில் 1731 துறைப்பணியாளர் மற்றும் 368 தன்னார்வலர்கள் என மொத்தம் 2099 பேர் ஈடுபட்டனர். மொத்தம் 3,496 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான 690 பிளாக்குகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
யானைகள் காப்பகம்
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின் படி, கடந்த 2017ஆம் ஆண்டு 2,761ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2,961 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் 4 பிற யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும் போது நீலகிரி கிழக்கு தொடர்ச்சி மலை யானைகள் காப்பகம் அதிக எண்ணிக்கையில் யானைகளை கொண்டுள்ளது.
ஆண், பெண் யானைகள் விகிதம்
இங்கு மட்டும் 2,477 யானைகள் இருக்கின்றன. குறிப்பாக கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,105 யானைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1,855 யானைகளும் உள்ளன. ஒட்டுமொத்த எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டால் ஆண் யானை மற்றும் பெண் யானை சதவிகிதம் 1 : 2.17 ஆக உள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை
தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள் யானைகள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டலாம்.