வேற லெவலில் மாறும் அரசுப் பேருந்துகள்: இனிமேல் அந்த பிரச்சினை இருக்காது!

தமிழக அரசுப் பேருந்துகள் வண்ணம் மாற்றப்பட்டு நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதில் 100 பேருந்துகளை முதலமைச்சர்

வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. அதன்படி 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான டெண்டர்கள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களை மையமாகக் கொண்டு அரசு போக்குவரத்துக்கழகம் செயல்படுகிறது. தொலை தூரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேதமான பேருந்துகள் அவ்வப்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன, பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளும் வாங்கப்பட்டு வருகின்றன.

தற்போது சீரமைக்கப்பட்ட பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் வண்ணத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. பேருந்து இருக்கைகள், சன்னல்கள் மற்றும் கம்பிகள் உள்ளிட்டவை சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பெங்களூரு, சென்னை, திருச்சி, கரூர் ஆகிய நகரங்களில் புதிய பேருந்துகள் தயாராகி வருகின்றன.

காஞ்சிபுரத்தில் பயணிகள் அரசு பேருந்து வழிமறித்து முற்றுகை

அரசுப் பேருந்துகளின் இருக்கைகள் ஒடுக்கமாகவும், வசதி குறைவாகவும் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது வரும் பேருந்துகளில் பயணிகளின் நலன் கருதி இருக்கைகள் வசதியாக அமைக்கப்பட்டுள்ளன.

மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறம் மாற்றப்பட்டு சீரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் தயாராகும் 100 பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு நான்கு நாள்கள் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக இந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.