"கிரிவலப்பாதையில் அசைவம் உண்பீர்களா..?" கூடவே கூடாது.. கொந்தளித்த ஆளுநர் ரவி.. மிரளும் திமுக

திருவண்ணாமலை:
“திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அசைவ உணவுகள் இருக்கக்கூடாது.. இதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும்,

அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல்போக்கே நிலவி வருகிறது. ஆரம்பத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை குறைகூறி வந்த ஆளுநர், சமீபகாலமாக திமுகவின் திராவிட சித்தாந்தத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, திமுக தனது சித்தாந்த முழக்கமாக கொண்டுள்ள திராவிட மாடலை, இறந்து புதைந்து போன மாடல் என்று பகிரங்கமாக விமர்சித்தார்.

திராவிட சித்தாந்தத்தை விமர்சிப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் பாஜகவின் சித்தாந்தமான சனாதன தர்மத்தை தான் செல்லும் இடங்களில் எல்லாம் புகழ்ந்து பேசி வருகிறார் ஆர்.என். ரவி. இதனால் அடிக்கடி ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே நேரடியாக வார்த்தை மோதல்களும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான், திருவண்ணாமலைக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி, அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கிரிவலப்பாதை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் வசிக்கும் சாமியாளர்களை இன்று சந்தித்த ஆளுநர் ரவி, அவர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், “திருவ்ணாமலை கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்கான இடம் கிடையாது. அசைவம் சாப்பிடுகிறவர்கள் வேறு எங்கேயாவது சென்று சாப்பிட்டுக் கொள்ளட்டும். கிரிவலப்பாதை மிகவும் புனிதமான இடம். இங்கு அசைவ உணவுகளை சாப்பிடுவதும், விற்பதும் சரியல்ல. இதனை தடுக்க என்னால் முடிந்த நடவடிக்கைகளை உடனே எடுப்பேன்” என்றார்.

இதனிடையே, ஆளுநரின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திமுகவினர் ஆளுநரின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.