இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஓகஸ்ட் 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 ஓகஸ்ட் 18 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் பெய்யக் கூடுவதுடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.